மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மணிகண்டன் 28. தீபாவளிக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான காவேரிப்பாக்கத்திற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று சர்கார் படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள், அந்த பகுதிகளில் சர்கார் படத்தின் பேனர்களை வைத்துள்ளனர். இதில் அவர் வீடு அருகேயும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர்களை மணிகண்டன் கிழித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவரை விஜய் ரசிகர்களிடமிருந்து மீட்டு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். சற்றுநேரத்தில் அந்த அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
இதையடுத்து அவரது உடம்பை கைப்பற்றிய போலீசார், மணிகண்டன் தானாக தூக்கில் தொங்கினாரா? இல்லை கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.