'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்துள்ள சர்கார் படம். முழுக்க முழுக்க அரசியல் பேசுகிறது. குறிப்பாக இன்றைய அரசியல் நிலவரத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், மற்றொருபுறம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
இந்நிலையில் சர்கார் படம் தொடர்பாக விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : சர்கார் படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்து வரும் நடிகரான விஜய், இதுபோன்று நடித்திருப்பது நல்லதல்ல என கூறியுள்ளார்.
ஹெச்.ராஜா சூசக விமர்சனம்
பா.ஜ.வின் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது : "படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, நல்ல கதையா திருடுங்கடா". விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி உள்ள படம் சர்கார். இப்படம் தான் சமீபத்தில் கதை திருட்டு பிரச்னையில் சிக்கியது. அப்படி பார்க்கையில் இவரின் பதிவு, சர்கார் படத்தை குறிப்பதாகவே தெரிகிறது.