இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 64-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு ஏராளமான பேர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
நான் பிறந்தநாள் வாழ்த்து கேட்பதை விட தமிழகத்திற்கு விரைவில் நல்ல பிறந்தநாளாக அமையும். அரசியல் மாற்றத்தை மக்கள் நீதி மையம் தரும். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என உறுதியாக கூற முடியாது. அப்படி நடக்குமானால் அதை சந்திக்க தயாராக உள்ளோம். 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர். தேர்தலின் போது பணம் கொடுக்கும் முறையை தடுக்க மக்களை சந்திப்பேன்.
ஊழலற்ற சுகாதாரமான அரசியல் இருக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. நான் எந்த கட்சிக்கும் குழலோ, ஊது குழலோ கிடையாது. நான் மக்களின் கருவி
நம் நாட்டில் ஜனநாயகம் சரியில்லாத போது மற்ற நாட்டை குறை சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் இலங்கையில் விரைவில் ஜனநாயகம் மலரும் என நம்புகிறேன்.
இவ்வாறு கமலஹாசன் பேசினார்.