'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இருக்கும் இளவங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு சேகர். இவர் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவுக்காரர். விவசாயத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட அன்பு சேகர், விவசாயப் பிரச்னைகளை மையமாக வைத்து 'தாகபூமி' என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். அந்த குறும்படத்தின் கதையைத் திருடி, நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படம் எடுக்கப்பட்டதாக, 2014ல் பிரச்னை கிளப்பினார் அன்பு சேகர்.
ஆனால், பிரமாண்டத்துக்கு மத்தியில் அன்பு சேகரின் குரல் எடுபடாமலேயே போனது. விடாத அன்பு சேகர், கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து நியாயம் கேட்டார். கால விரயம்தான் ஏற்பட்டதே தவிர, அன்பு சேகருக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இதனால், நியாயம் கேட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் முன்பாக, குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் அன்பு சேகர். அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால் உண்ணாவிரதம் இருந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
'இனியாவது அன்பு சேகருக்கு நியாயம் கிடைக்குமா?' என்பதுதான் அவரது குடும்பத்தினரின் கேள்வி.