‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய விண்வெளி ஆய்வு ரகசியங்களை வெளி நாடுகளுக்கு விற்றார் என குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின், அவர் குற்றமற்றவர் என கூறி, அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்காக, அவருக்கு நஷ்ட ஈடும் வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், நம்பி நாராயணன் கதையை படமாக்கும் தீவிரத்தில் நடிகர் மாதவன் இறங்கி உள்ளார். நம்பி நாராயணன் கேரக்டரில் அவரே நடிக்கவும் தீர்மானித்து, படம் எடுக்கும் தீவிரத்தில் இருக்க, அப்படியொரு படம் எடுத்தால், அவர் மீது வழக்குப் போடப்படும் என, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார். 'பூ', 'களவாணி' போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கும் எஸ்.எஸ்.குமரன், 'கேரளம் நாட்டிளம் பெண்களுடனே', 'தேநீர் விடுதி' போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார்.
இது குறித்து குமரன் கூறியிருப்பதாவது : இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம்பி நாராயணன் வாழ்க்கையை தொலைக்காட்சித் தொடராக எடுக்க முடிவெடுத்து, நம்பி நாராயணின் அனுமதியும் பெற்று, மிகுந்த பொருட் செலவில் இருபது எபிசோடுகள் வரை எடுத்தும் விட்டேன். பின், சில சட்ட சிக்கல்களால், அதை தொடர முடியாமல் போனதில், எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல காலம் பிடித்தது.
இந்நிலையில், என் நிலை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், நம்பி நாராயணனிடம் பேசி விட்டேன்; அவர் எனக்கு அனுமதி கொடுத்து விட்டார் என சொல்லி, நம்பி நாராயணன் கதையை படமாக்க முயன்றிருக்கும் நடிகர் மாதவன், படத்துக்கான துவக்க விழாவையும் நடத்தி இருக்கிறார். இது சட்ட விரோதமானது. நடிகர் மாதவனிடம் நடந்தவைகள் அனைத்தையும் தெரிவித்த பின்னும், அவர் தன்னிச்சையாக செயல்படுவது சரியல்ல. அதனால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.