தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்ட விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு புடிச்சவன்' படம் கடைசி நேர சிக்கலில் வெளியாகாமல் தள்ளிப் போய்விட்டது. படத்திற்கு வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான பண வரவு வராததால் தான் படம் தள்ளிப் போனது என்கிறார்கள்.
படத்தை நவம்பர் 16ம் தேதி வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், தயாரிப்பாளர் சங்க வெளியீட்டுக் குழு முடிவின்படி ஏற்கெனவே, “காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2, ஆர்கே நகர்” ஆகிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம், அன்றைய தினம் வெளியிடப் போவதாக 'அடங்க மறு, சீதக்காதி' ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டன. நவம்பர் 16ம் தேதி சிறிய பட்ஜெட் படங்கள்தான் வெளியாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் ஏற்கெனவே அறிவித்த நிலையில், 'அடங்கமறு, சீதக்காதி' படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்து படத்தைத் தள்ளி வைக்கச் சொன்னார்களாம். அவர்களும் தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்கிணங்க படங்களைத் தள்ளிவைத்துவிட்டார்கள்.
ஆனால், 'திமிரு புடிச்சவன்' படத்தை நவம்பர் 16ம் தேதி வெளியிட வேண்டும் என விஜய் ஆண்டனியின் அடுத்த பட தயாரிப்பாளர் நெருக்கடி கொடுத்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.