விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி உள்பட பல படங்களை இயக்கியவர் வி.இசட் துரை. இவர் கடைசியாக இயக்கிய ஏமாலி படம் பெரும் தோல்வி அடைந்தது. பேய்க்கு பயப்படும் வி.இசட் துரை, இருட்டு என்ற பேய் படம் இயக்குகிறார். இதில் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார்.
இவர்கள் தவிர தன்ஷிகா, விடிவி.கணேஷ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைக்கிறார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. படம் பற்றி இயக்குனர் வி.இசட்.துரை கூறியதாவது:
'இருட்டு', ஏற்கனவே வெளியான பேய்படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இருக்கும். வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி கொண்டு வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும்.
பொதுவாக நான் பேய்க்கு பயப்படுகிறவன். அதனால் பேய் படங்களை பார்ப்பதில்லை. சுந்தர்.சியின் வேண்டுகோளுக்காக பல பேய் படங்களை பார்த்து அந்த படங்களில் வராத கதை அம்சத்தோடு இந்தப்படத்தை இயக்கி இருக்கிறேன்.
பேய் இருக்கிறதா? இல்லையா? என்றொரு விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பவங்கள் அதைவிட பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.
சுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார். இவருடைய மனைவியாக சாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும், நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், விடிவி கணேஷும் பயணிப்பார்கள்.
படத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள், சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார் துரை.