பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
என், 25வது வயது வரை, தினம் தினம், தற்கொலை செய்யும் எண்ணத்துடனேயே வாழ்ந்தேன் என, இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், தன் சுயசரிதையில், குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 51, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து, உலக அளவில் பிரபலமானவர். ஆஸ்கர் விருது பெற்றவர்.ரஹ்மானின் வாழ்க்கையை பற்றி, அவரே கூறி, கிருஷ்ணா திரிலோக் என்ற எழுத்தாளர் எழுதிய, நோட்ஸ் ஆப் எ டிரீம் என்ற, சுயசரிதை வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், இந்த புத்தகம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், தன் வாழ்க்கை பற்றிய, பல சுவாரஸ்யமான தகவல்களை, ரஹ்மான் பகிர்ந்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:எனக்கு, 9 வயதாகும் போது, தந்தை இறந்து விட்டார். அதன் பின், என் வாழ்க்கை ஸ்தம்பித்தது. 12 - 22 வயது வரை, அனுபவிக்காத கஷ்டங்களே இல்லை.
என், 25 வயது வரை, தினம் தினம், தற்கொலை செய்யும் எண்ணத்துடனேயே வாழ்ந்தேன். இந்த காலகட்டம் தான், என்னை எதற்கும் அஞ்சாதவனாக மாற்றியது.எனக்கு திலீப் குமார் என்று வீட்டில் வைத்த பெயர் பிடிக்கவில்லை. அந்த பெயரை, ஏன் வெறுத்தேன் என, இன்று வரை தெரியவில்லை. என் கடந்த கால கண்ணீர் வாழ்க்கையில் இருந்து, முற்றிலுமாக வெளியேறி, வேறொரு புதிய மனிதனாக மாற விரும்பினேன். இதனால் தான், முஸ்லிம் மதத்துக்கு மாறி, என் பெயரை ரஹ்மான் என மாற்றினேன்.இவ்வாறு அவர் கூறினார்.