Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா | ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ரசிகர்கள் அளித்த தீபாவளி பரிசு : பிரேம்குமாரின் பிரேமம்

04 நவ, 2018 - 14:53 IST
எழுத்தின் அளவு:
director-premkumar-interview

தமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அந்த தெய்வீகமான காதல் படங்களை கொடுப்பதற்கு தனித்திறமையும் தேவை. அப்படியொரு மென்மையான, தெய்வீக காதலை எல்லா தரப்பினரும் வரவேற்கும் வகையில் தன் முதல் படத்திலேயே தந்து பாராட்டை குவித்து வருகிறார்... கவிஞர், கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், இயற்கை ஆர்வலர் என பல முகங்களுக்கு சொந்தக்காரர். இந்த ஆண்டின் அபார

வெற்றிப்படம் '96'ன் இயக்குனர் பிரேம்குமார். முதல் படம் தந்த வெற்றி உற்சாகத்தில் அடுத்த கதை தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் பிரேம்குமாருடன் தினமலர்


சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...


* முதல் படமே 'ஹிட்' ஆன உற்சாகம் எப்படி உள்ளது


மற்றவர்களை போலவே எழுத்தாளர் கனவுடன் சினிமாவிற்கு வந்தேன். பெரிய வழிகாட்டுதல் இல்லை. வீட்டில் எல்லோருக்குமே போட்டோகிராபி தெரியும். பிறகு அதில் நுணுக்கங்களை கற்று கேமராமேன் ஆகி சில இயக்குனர்களிடம் உதவியாளராக தொடர்ந்தேன். இருப்பினும் எழுதுவதை நிறுத்தவில்லை. நான் 1996 பிளஸ் 2 பேட்ச். அந்த நினைவுகளை வைத்து தான் இக்கதையை எழுதினேன். எழுதும் போதே விஜய் சேதுபதி, திரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.


விஜய் சேதுபதி எனக்கு நல்ல நண்பர். உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். வித்தியாசமான படங்களை கொடுத்து கொண்டிருப்பவர், இந்த கதையை கேட்டு என்ன செய்ய போகிறாரோ என நினைத்தேன். ஆனால் கதையை கேட்டு விட்டு ஓ.கே. சொன்னார். ரசிகர்கள் அளித்த தீபாவளி பரிசாக இதை கருதுகிறேன்.


* ஒளிப்பதிவாளர் இயக்குனரானது


அதற்கும் விஜய்சேதுபதி தான் காரணம். இந்த கதையை அவரிடம் சொல்லி விட்டு யாராவது நல்ல இயக்குனரை வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நீங்களே இயக்கி விடுங்கள் என சொல்லி விட்டார்.


* கதையின் பின்னணி


சென்னையில் சினிமாவிற்கு வந்த பிறகு பிளஸ் 2 படித்த நினைவுகள் ஒரு முறை வந்தன. அதன்படி நண்பர்களை தொடர்பு கொண்டு 1996 பேட்ச் நண்பர்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய கூறினேன். அதன்படி சென்னையில் சந்தித்தனர். ஆனால் நான் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை. அதில் கலந்து கொண்டவர்கள் குறித்து நண்பர்களிடம் கேட்ட போது


இருவரது வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை.


மற்றொரு தோழி வெளிநாட்டில் செட்டிலாகியவர். உண்மையில் இவர்களுக்குள் காதல் இல்லை. அதில் சில மாற்றங்களை செய்து '96' கதையை உருவாக்கினேன்.


* படம் வெளியான பிறகு விஜய் சேதுபதி என்ன சொன்னார்


பாராட்டினார். திரிஷா பிரிேஷா கூட பார்க்கவில்லை. படத்தை பார்த்து விட்டு இயக்குனர்கள் சேரன், பார்த்திபன், பாலாஜி தரணிதரன் என பலரும் பாராட்டினர். இந்த படம் ஆட்டோகிராப் போல இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் சேரன் இந்த படம் வித்தியாசமாக இருப்பதாக விளக்கம் அளித்து விட்டு என்னை அழைத்து பாராட்டினார்.




* பிளாஷ்பேக் காட்சிக்கு நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது


விஜய் சேதுபதி சிறியவனாக இருந்தால் எப்படி இருப்பார் என யோசித்த போது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா நினைவுக்கு வந்தார். கவுரி ஜி கிஷண் என் நண்பர் ஒருவரது சகோதரி மகள். இருவருமே நான் எதிர்பார்த்தளவு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியது அருமை.


* '96' இரண்டாம் பாகம் எதிர்பார்க்கலாமா


தற்போது இதுகுறித்து எந்த ஐடியாவும் இல்லை. அப்படியொரு கதை தோன்றவில்லை. ஆனால் எதிர்காலத்தில் எதையும் சொல்ல முடியாது. வரலாம்.


* அடுத்து


மற்றொரு கதை எழுதி வருகிறேன். எழுதுவதை நிறுத்த போவதில்லை. வாய்ப்பு கிடைத்தால் கேமராமேனாகவும் தொடர்வேன்.





* இன்றைய சினிமா உலகம்...


'96' படத்தில் சண்டையில்லை. காதலையும் மென்மையாக தெரியப்படுத்தியுள்ளோம். தரமான வித்தியாசமான கதைகளை ரசிகர்கள் வரவேற்பர் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.


* வனவிலங்குகளை படமெடுத்த அனுபவம்


பிரபல கலைஞர் அல்போன்ஸ் ராயிடம் உதவியாளராக இருந்த போது ராஜநாகம் குட்டியிடுவதை படமெடுத்தேன். ஒவ்வொரு முட்டை உடைந்து குட்டி வெளிவருவதை படமெடுத்தது வித்தியாசமான அனுபவம்.


வாழ்த்த premredearth@gmail.com


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in