சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாய் நடந்தது. விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது :
2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் ஸ்டைலாக, மாஸாக, வித்தியாசமாக இருக்கிறது. இன்றும் அவரது நடிப்பு புதிதாக உள்ளது. டில்லியில் 50 நாள் ஷூட்டிங், 500 - 1000 பேர் படப்பிடிப்புக்கு தயாராக இருந்தபோது, ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை. இருந்தாலும் அவர் படப்பிடிப்புக்கு வந்து நடித்து கொடுத்தார்.
படப்பிடிப்பில் ஒருநாள் அவருக்கு முழங்காலில் அடிப்பட்டது. அதுபற்றி அவர் சொல்லவே இல்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று அடம் பிடித்தார். அவரை வற்புறுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். 4 தையல் போடப்பட்டது. அந்தளவுக்கு இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் ரஜினி. இதுவே அவரை இன்றும் சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது.
2.0 வில் ரஜினியை வசீகரனாக, சிட்டியாக, ஜெயின்ட் சிட்டி என பல வடிவத்தில் பார்க்கலாம். இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. 3டி வடிவம், 4டி ஒலியமைப்பு என படம் வித்தியாசமாக இருக்கும்.
அக்சய் எந்தப்படத்திலும் படாத கஷ்டத்தை இந்தப்படத்திற்கு பண்ணியிருக்கிறார். ரஹ்மான், பேக்ரவுண்ட் மியூசிக்கை 6 மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டார். அவரின் ஒவ்வொரு பிஜிஎம்., ஒரு பாடல் போன்று உள்ளது. விரைவில் அதை வெளியிட எண்ணியுள்ளோம். இந்தப்படத்திற்காக என்னுடன் நாயா, பேயா உழைத்த எனது உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
தொடர்ந்து அவரிடம் இயக்குநர்கள் ராஜமவுலி, கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா ஆகியோர் முன் வைத்த கேள்விகளுக்கு ஷங்கர் பதிலளித்தாவது :
ராஜமவுலி கேள்வி : 2.0 படத்தை எடுத்தபோது எந்த மாதிரியான மன அழுத்தம் இருந்தது.?
ஷங்கர் பதில் : முதலில் ராஜமவுலியின் மிகப்பெரிய ரசிகன் நான். இந்தியாவின் பெருமைக்குரியவர். 2.0 படத்தை பொறுத்தமட்டில் நிறைய உழைக்கணும் அந்த சிந்தனை மட்டும் தான் இருந்தது. கடுமையாக உழைத்தோம். ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள் என்றார்.
சிவராஜ் குமார் கேள்வி : எப்படி இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள், அதற்கான சிந்தனை எங்கிருந்து வருகிறது?
ஷங்கர் பதில் : எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக வருகிறதா என புரியவில்லை. தலைப்பு படத்தின் கதை எழுதும் போதே பொருந்திவிடும். சிவராஜ் குமார் உடன் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக படம் பண்ணலாம் என்றார்.
உபேந்திரா கேள்வி : ஒரு இயக்குநராக, நடிகராக எனக்கு நீங்கள் தரும் டிப்ஸ் என்ன?
ஷங்கர் பதில் : நீங்கள் சிறந்த நடிகர், இயக்குநர். உங்களுக்கு என்ன டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. உங்களின் A படம் எனக்கு மிக பிடிக்கும். இருந்தாலும் பொதுவாக எல்லா தயாரிப்பாளர்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் தேவைக்காக படம் பண்ணாதீர்கள். நல்ல கதையாக கொடுங்கள், படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்றார்.
கேள்வி : 2.0-வில் சவாலாக இருந்தது என்ன.?
ஷங்கர் பதில் : கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவை தான் பெரும் சவாலாக இருந்தது. படத்தின் தாமதத்திற்கும் அது தான் காரணம் என்றார்.
கேள்வி : 3.0 படம் வருமா?
ஷங்கர் : 3.0 பற்றி யோசனை உள்ளது. கதை அமையும் போது கண்டிப்பாக அடுத்தபாகம் உருவாகும்.
இவ்வாறு ஷங்கர் பேசினார்.