அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீபத்தில் மும்பையில் ஜியோ மாமி (JIO MAMI) திரைப்பட விழா நடைபெற்றது. கேரளாவில் இருந்து சினிமா பெண்கள் நல அமைப்பு சார்பாக இதில் கலந்து கொண்டார் நடிகை பார்வதி. இந்த நிகழ்வில் பொது மேடையில் பேசிய அவர், 3 வயதிலே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், ஆனால் அது பாலியல் துன்புறுத்தல் தான் என உணர்ந்து கொள்ள தனக்கு 17 வருடம் ஆனதாகவும் கூறி, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி எவ்வளவு அவசியமானது என்பது குறித்து வலியுறுத்தினார்.
மேலும் மீ டூ விவகாரம் குறித்தும் பேசிய அவர், பாலிவுட்டில் இப்படி குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்ததுமே, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, குற்றவாளிகளுக்கு எதிராக பலரும் தங்களது பட வாய்ப்புகளை உதறினார்கள். இந்த விஷயத்தில் தென்னிந்திய திரையுலகத்தினர் பாலிவுட்டை பார்த்து கற்றுகொள்ள வேண்டும்” என போகிற போக்கில் ஒரு பிடிபிடித்தார் பார்வதி..