ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார், அதன்பிறகு இயக்கி வெளிவந்த படம் ராட்சசன். விஷ்ணு, அமலாபால், முனீஷ்காந்த், காளிவெங்கட் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கடந்த 25 நாட்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் கிறிஸ்டோபர் என்ற வில்லன் வேடத்தில் சரவணன் என்பவர் நடித்திருந்தார்.
ஆனால் அவரது முகம் முற்றிலுமாக மாற்றப்பட்டிருந்தது. அதனால் அந்த வில்லன் யார் என்பது குறித்து எழுந்த கேள்விகளுக்கு விரைவில் சொல்கிறேன் என்று கூறிவந்தார் ராம்குமார். இந்நிலையில் நேற்று ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணன் என்பவரை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அவர்.
அதையடுத்து சரவணன் பேசும்போது, நான் சினிமாவில் ஒரு இடத்த பிடிக்க பல வருடங்களாக போராடி வருகிறேன். ஓரிரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளேன். இப்போது நானே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வில்லன் வேடத்தை கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்தி விட்டார் ராம்குமார். அதோடு முகத்தை மாற்றி நடித்த என்னை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்யவே ஒரு விழா எடுத்துள்ளார். இதை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
இந்தப்படத்தில் மேஜிக் மேனாக நடித்ததால், அதற்காக முறையாக பயிற்சி எடுத்து நடித்தேன். மேலும், என் உடம்பு முழுக்க மேக்கப் போட்டு என் தோற்றத்தையே மாற்றியிருந்ததால் மேக்கப்பை கலைக்கும் வரை ஜூஸ் மட்டுமே குடித்து நடித்தேன். சில நாட்களில் பசியால் மயக்கம் வந்து தடுமாறியிருக்கிறேன். அந்த அளவுக்கு இந்த கிறிஸ்டோபர் வேடத்திற்காக நான் கஷ்டப்பட்டிருக்கிறேன் என்றார்.