பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பல திரைப்பிரபலங்கள் பாராட்டினர்.
இந்நிலையில், இப்படம், கோவாவில் நடக்கும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது. கோவாவில் நவ., 20 முதல் 28-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. உலகெங்கிலும் சுமார் 200 படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கின்றன.
இந்தியன் பனோரமா பிரிவில் பரியேறும் பெருமாள் தேர்வாகி உள்ளது. இப்படத்துடன் பேரன்பு, டூ-லெட் மற்றும் பாரம் ஆகிய படங்களும் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.