பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. அதன்பிறகு சில படங்களில் நடித்தபோதும் அவரால் தமிழில் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் பாலிவுட்டுக்கு சென்று சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து தனது திறமையை நிரூபித்தார் டாப்சி.
தற்போது, கேம் ஓவர் என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கும் அவர், இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டகால கனவாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
மணிரத்னம் படங்களின் மேக்கிங், கதாநாயகிகளை அவர் தனது படங்களில் வெளிப்படுத்தும் விதத்தை நான் வித்தியாசமாக உணர்கிறேன். அவர் படத்தில் நடிக்கும்போது தான் நடிகைகள் நடிப்பில் முழுமை பெறுகிறார்கள். அதனால் அவரது படத்தில் நடிக்க வேண்டும். என்னை அனைவரும் மணிரத்னம் படநாயகி என்று பெருமையாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் டாப்சி.