விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பிரபல கன்னட நடிகை சங்கீதா பட். தயவிட்டு கமனசி, எரடான் சேல், மம்மு டீ அங்காடி, பிரீத்தி, கீத்தி இத்யாதி உள்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். சங்கீதா பட் தமிழ் காமெடி நடிகர் ஒருவர் மீது பெயர் குறிப்பிடாமல் பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவில் சில காலங்கள் தான் இருந்தேன். அப்போது நான் நிறைய பாலியல் தொல்லைகளை சந்தித்தேன். முன்னணி நடிகர்கள், இயக்குனர்களால் பாதிக்கப்பட்டேன். எனக்கு 15 வயது இருக்கும்போதே இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அவரது காரில் அழைத்துச் சென்று சில்மிஷங்கள் செய்தார். நான் அதிர்ச்சியானேன்.
2016-ல் தமிழில் டி.வி நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்தேன். அவரது பைக் பின்னால் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சியை எடுத்தனர். பைக்கை வேகமாக ஓட்டி சென்று திடீரென்று நிறுத்தினார். அப்போது என்னிடம் "நீங்க அந்த பிராண்ட் பிராவா அணிந்து இருக்கிறீர்கள்?" என்று கேட்டு ஆபாசமாக பேசினார். மேலும் சில முன்னணி நடிகர்கள் இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இவ்வாறு சங்கீதா பட் கூறியிருந்தார்.
யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனாலும் நெட்டிசன்கள் சங்கீதா பட்டை கடுமையாகவும், ஆபாசமாகவும் விமர்சிக்க மிகவும் கலங்கி விட்டார் சங்கீதா. அந்த பதிவை நீக்கிவிட்டு பின்னர் அவர் முகநூலில் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவோ, யாருடைய இமேஜையும் கெடுப்பதற்காகவோ, குற்றம் சொல்வதற்காகவோ அந்த பதிவை நான் வெளியிடவில்லை. மீ டூ என்பது பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிடும் ஒரு தளம். அந்த வகையில் எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறிப்பிட்டிருந்தேன். அதற்காக என்னை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். நான் இப்போது சினிமாவை விட்டு விலகி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை இத்தோடு விட்டு விடுங்கள்" என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சங்கீதா பட் தமிழில் நடித்த ஒரே படம் ஆரம்பமே அட்டகாசம் என்ற படம். இதில் ஹீரோவாக நடித்தது லொள்ளு சபா ஜீவா. என்பது குறிப்பிடத்தக்கது.