வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பட வாய்ப்பு வருகிறதோ இல்லையோ... நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்பு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா உட்பட அதில் பங்குபெற்ற பலரும் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தலையைக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடிகை ஜனனி ஐயர், நடிகர் தாடி பாலாஜி இருவரும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
“பாலியல் தொல்லை குறித்து அண்மையில் நிறைய பெண்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது ஆரோக்கியமானது. திரைப்படத்துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. திரைப்படத்துறை என்பதால் அது பெரிதாக பேசப்படுகிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடத்தாமல் உடனே புகார் தெரிவிக்க வேண்டும். வெளியே சொன்னால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும், தவறு செய்பவர்களுக்கும் பயம் ஏற்படும்.” என்று ஜனனி அய்யர் சொன்னார்.
அவரது கருத்துக்கு நேர்மாறாக கருத்து சொன்னார் நடிகர் தாடி பாலாஜி.... “மீ டூ விவகாரத்தில் குற்றம்சாட்டும் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்களா? அல்லது மற்றவர்களுக்கு விளம்பரம் தேடிக்கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை. இது கேவலமான விஷயம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. குற்றம் சொல்பவர்கள் அவரை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர். ஆண்களுக்கும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு நிறைய தொந்தரவுகள் உள்ளன. ஆண்கள் சங்கம் அமைக்க எனது முழு ஆதரவு உண்டு” என்றார்.