இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்த சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். பெரும் பொருட்செலவில் தயாராகி உள்ள இந்தப் படம் தீபாவளியையொட்டி வருகிற 6ந் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் "சர்கார் படத்தின் கதை எனது செங்கோல் என்ற கதை. அதை நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்" என்று துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதோடு சர்கார் படத்தின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த பிரச்சினையில் சர்கார் தன்னுடைய கதைதான் என்பதை நிரூபிக்க சர்கார் கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்திடம் கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இரண்டையும் படித்து பார்த்த கே.பாக்யராஜ் இரண்டு கதையும் ஒன்றுதான், துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று முறைப்படி கடிதம் கொடுத்து விட்டார். இது சர்கார் படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தை பார்க்காமல் ஸ்கிரிப்டை முழுமையாக படிக்காமல் எப்படி பாக்யராஜ் இப்படி ஒரு கருத்தை சொல்லாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.
இந்த நிலையில் கே.பாக்யராஜ் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் சர்கார் படத்தின் முழு கதையையும் அவரது பாணியில் சொல்லிவிட்டார். ஹீரோ என்ட்ரி சீனிலிருந்து கிளைமாக்ஸ் வரை அனைத்தையும் சொல்லிவிட்டார். இது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.