தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
வெண்ணிலா கபடிக் குழு 2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பிஸியாக நடித்து வரகிறார் நடிகர் விக்ராந்த். அடுத்தப்படியாக இவரது சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இந்தப்படத்திற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார் விஜய் சேதுபதி.
இதுப்பற்றி சஞ்ஜீவ் கூறுகையில், 2015-ல் விக்ராந்த்தை வைத்து 'தாக்க தாக்க' படத்தை இயக்கினேன். இதையடுத்து விஜய் சேதுபதியிடம் ஒர கதையை சொன்னேன். இதை கேட்டதும், நன்றாக இருக்கிறது, விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும். இந்தப்படத்திற்கு நான் வசனம் எழுதவா...? என கேட்டார். அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த 'ஆரஞ்சு மிட்டாய் ' என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம் என்றார்.