சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களம் காண உள்ள நிலையில் தன் ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் வேலைகளிலும் உள்ளார். அவரது ரசிகர் மன்றம், மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிககள் நியமிக்கட்டுள்ளனர்.
ஆலோசனை
விதிகளை மீறியதாக ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து சிலர் நீக்கப்பட்டனர். அவர்களை ஏன் நீக்கினர் என ரஜினி நீண்ட அறிக்கை ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நீக்கப்பட்டவர்களில் சிலர் நேரடியாகவும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரினர். இதனையடுத்து, அவர்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.
பிரிக்க முடியாது
ரஜினி வெளியிட்ட அறிக்கை : நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்த சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் சென்றாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்.
இவ்வாறு ரஜினிகாநத் கூறி உள்ளார்.
நீக்கப்பட்டவர்கள் சேர்ப்பு?
இதனிடையே நீக்கப்பட்ட கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளனர். அதோடு மீண்டும் தங்களை மக்கள் மன்றத்தில் இணைத்து கொள்ளும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர். அதை ரஜினியும் ஏற்றுள்ளார். அவர்களுடன் ரஜினி குரூப் போட்டோவும் எடுத்து கொண்டார்.