இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கான அமைதி நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதுப்பற்றி செய்தியாளர்களிடம் லதா பேசியதாவது :
சென்னை, திருவான்மியூரில் நவ., 2 முதல் 4-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. 1500 குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
அனைத்து குக்கிராமங்களிலும் தயா அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை வைத்து பிழைக்கும் அளவுக்கு இந்த சமூகம் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தை கடத்தலை தடுக்க ஒவ்வொரு ஊரிலும் முகாம்கள் அமைக்கப்படும்.
மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எந்த துறையிலும் கெடுதல் நடக்க கூடாது என விரும்புகிறேன் என்றார்.