தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் சல்மான்கான், ஷாரூக்கான், ஆமீர்கான், அக்சய் குமார், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இருப்பார்கள். இவர்களது சம்பளம் எவ்வளவு என்று சரியாக சொல்ல முடியவில்லை என்றாலும் சுமாராக 50 கோடி வரை இவர்கள் சம்பளம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
ஹீரோக்கள் அளவிற்கு இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வழங்குப்படுவது கிடையாது. ஆனால், 'பத்மாவத்' படத்தில் படத்தின் நாயகன் ஷாகித் கபூர், வில்லன் ரன்வீர் சிங் ஆகியோரை விட படத்தின் நாயகி தீபிகா படுகோனோவுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக பாலிவுட்டில் சொல்கிறார்கள்.
இப்போது தீபிகா படுகோனே அந்தப் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விட 'மணிகர்னிகா' படத்தில் கங்கனா ரணாவத்திற்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக 5 அல்லது 6 கோடி சம்பளம் வாங்கும் கங்கனா, இந்தப் படத்திற்க 14 கோடி ரூபாய் வரை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். அது உண்மையென்றால் இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமை கங்கனாவுக்குக் கிடைக்கும்.