புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
நகைச்சுவை நடிகராக கோலோச்சிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு தனக்குப் பின் விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் ஹீரோவாக ஜெயித்ததை பார்த்துவிட்டு, தானும் ஹீரோவாக நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால், அவர் நாயகனாக நடித்த சில படங்களே தற்போது நின்று போய்விட்டன.
எப்போதே வெளிவர வேண்டிய 'சர்வர் சுந்தரம்' பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'ஓடி ஓடி உழைக்கணும்', ஒரு கட்டத்தில் ஓடாமல் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் ஆரம்பமான 'மன்னவன் வந்தானடி' அப்படியே தடுமாறி நிற்கிறது. செல்வராகவன், சூர்யா நடிக்கும் 'என்ஜிகே' படத்தை இயக்கப் போய்விட்டார். இந்தப் படங்கள் தன்னை மீட்டெடுக்காது என்று நினைத்த சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போய்விட்டார். நேற்று அப்படத்தின் முதல் பார்வையும் வெளியானது.
அதோடு, நேற்று அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றையும் ஆரம்பித்துவிட்டார். நடித்து நின்று போயிருக்கும் படங்களுக்கு முன்பாக 'தில்லுக்கு துட்டு 2' படத்தை வெளியிடும் முயற்சியில் சந்தானம் இருக்கிறாராம். முதல் பாகத்தைப் போலவே இந்தப் படம் 'துட்டு' வசூல் செய்து தன்னைக் காப்பாற்றும் என நினைக்கிறாராம்.