ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து, அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தற்போது அவர் ராஜபாண்டி இயக்கும் கள்ளப்பார்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் தான் படம் இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் அரவிந்த்சாமி. அதனால் தற்போது தன்னிடம் உள்ள கதையை சில நடிகர்களிடம் சொல்லி வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் கள்ளபார்ட் படப்பிடிப்பு நடந்தபோது, அரவிந்த்சாமியை சந்தித்து கதை கேட்டுள்ளார் விஜய்சேதுபதி.
இரண்டு மணி நேரம் கேரவனுக்குள் அமர்ந்து விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியிருக்கிறார் அரவிந்த்சாமி. இதேப்போல் இன்னும் சில நடிகர்களிடமும் அவர் கதை சொல்லியிருக்கிறார். ஆக, கள்ளபார்ட் படத்தில் நடித்து முடித்ததும் தான் இயக்கும் படம் குறித்து தகவலை அரவிந்த்சாமி வெளியிடுவார் என்று தெரிகிறது.