ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறினார். இதை மறுத்த சுசி.கணேசன் லீனா மணிமேகலை மீது ஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சுசி கணேசன் கடைசியாக இயக்கிய திருட்டுப்பயலே 2ம் பாகத்தில் நடித்த நடிகை அமலாபால், அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது டபுள் மீனிங்கில் பேசியும், உடலை ஒட்டி உரசியும் பாலியல் தொல்லை தந்ததாக அமலாபால் குற்றம்சாட்டினார்.
இந்த செய்தி வெளியானதும் சுசி கணேசனும், அவரது மனைவி மஞ்சரியும் தொலைபேசியில் மிரட்டியதாக அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்து அமலாபால் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது :
இப்போதுதான் என் வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தேன். இயக்குனர் சுசி கணேசனும், அவரது மனைவி மஞ்சரியும் என்னை தொலைபேசியில் அழைத்தனர். அவர்களுக்கு உரிய விளக்கம் தரலாம் என்று நினைத்து அந்த அழைப்பை எடுத்து பேசினேன். சுசி கணேசன் மனைவியை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால் சுசி கணேசன் என்னை ஆபாசமாக திட்ட ஆரம்பித்தார். அதை கேட்டு அவரது மனைவி சிரித்தார். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் இருவரும் சேர்ந்து என்னை ஆபாசமாக திட்டினர். இதுபோன்ற தந்திரங்களால் என்னை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். என்று எழுதியிருக்கிறார் அமலாபால்.