'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோவை:''இசைக்கு வெற்றி, தோல்வி கிடையாது; உங்களுக்குத்தான் நான் இசைஞானி; எனக்கு நான் இசைஞானியே இல்லை,'' என இளையராஜா பேசினார்.
இளையராஜாவின், 75வது பிறந்தநாள் முன்னிட்டு, 'இளையராஜாவுடன் ஒரு நாள்' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற இளையராஜா மாணவர்களிடம் பேசியதாவது:என்னோடு பழகியவர்களெல்லாம் நண்பர்கள் இல்லை. ஹார்மோனியப்பெட்டி மட்டுமே என் நண்பன். இதன் இன்னொரு ஸ்பெஷல், இதே கோவையில் உள்ள உக்கடம் பகுதியில், என் அண்ணன், 60 ரூபாய் கொடுத்து இதை வாங்கினார். என் விலை மதிப்பற்ற பொக்கிஷம் இது.
இதுவரை, 1,300 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி பாடல்கள் எதுவுமே அமைந்ததில்லை.
ஒவ்வொரு பாடலிலும், எதாவது ஒரு தவறு இருக்கும். இவ்வளவுதான் இசை என முற்றுப்புள்ளி வைக்கமுடியாது. இசை அற்புதமான கலை; படம் சொல்லாததெல்லாம் இசை சொல்லும். பேச முடியாதவற்றை இந்த இசை பேசும்; சொல்ல வைப்பேன்; வைத்துள்ளேன்.என்னதான், தொழில்நுட்பம் உயர்ந்தாலும், அது ஒரு மாயை மட்டுமே. ஏற்கனவே, புரோகிராம் செய்த கருவிகளில் உயிர்ப்பு இருப்பதில்லை. இதை உணர்ந்து ஹாலிவுட்டில், இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திரும்ப பழைய, 'ரெக்கார்டிங்' தரத்தை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.