'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கி தந்தமைக்கு காரணமாக திகழ்ந்த கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ இரங்கல் செய்தியில்,
சில தனி மனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறை தான் ஈடு செய்ய வேண்டும். அப்படி ஒரு இணையற்ற சாதனையாளர் நா.முத்துசாமி. கூத்து உலகிற்கு, நாடக உலகிற்கு, சினிமாவிற்கு தூரத்து உறவாக அவர் பயன்பட்டிருக்கிறார். பல நடிகர்கள் அங்கிருந்து பயிற்சி பெற்று சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு அவரது வீச்சு, பல்துறை வித்தராக அவரை வைத்திருந்தது. இன்று அவர் ஒருவராய் செய்த வேலையை, ஒரு தலைமுறை நின்று செய்ய கடமைப்பட்டிருக்கிறது. அவர் இருந்தபோது செய்தமைக்கு ஒரு கலைஞனாக நன்றி.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.