தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அதர்வா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் 'செம போத ஆகாத'. பாணா காத்தாடி படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்கு கைகொடுக்கும் விதமாக, கிக்காஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரித்தார் அதர்வா.
இப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மதியழகன் படத்தை வாங்கி வெளியிட்டு அதர்வாவுக்கு உதவினார். ஆனால் முதல் இரண்டு காட்சிகள் ரத்து, ரிலீஸ் பிரச்னை போன்றவற்றால் மதியழகனுக்கு சுமார் ரூ.5 கோடி நஷ்டம்.
மதியழகனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக, இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, அடுத்தப்படியாக இவரது தயாரிப்பில் மின்னல் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக் கொடுக்க முன்வந்துள்ளார் அதர்வா.
இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி, 6 மாதத்திற்குள் முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.