ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் பல திரைபிரபலங்களை உருவாக்கிய கூத்துப்பட்டறை நிறுவனம் நா.முத்துசாமி (82), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சினிமா நடிகர்களுக்கு அடித்தளமாக இருந்தது நாடகம். ஆனால் காலப்போக்கில் அது மறைந்துவிட்டது. ஒரு சிலர் மட்டுமே இன்னும் நாடகங்களை தொடர்ந்து வருகின்றனர். இருப்பினும் சினிமா நடிகர்களுக்கு இன்றைக்கு வரப்பிரசாதமாக இருப்பது கூத்துப்பட்டறை. இதை நிறுவிய பெருமைக்கு சொந்தக்காரர் முத்துசாமி.
தஞ்சாவூர் மாவட்டம், புஞ்சை கிராமத்தை சேர்ந்த இவர் தெருக்கூத்து மூலம் பிரபலமாகி பின்னர் கூத்துப்பட்டறை தொடங்கி பல நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்தவர். இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதி ஒரு கூத்துப்பட்டறை கலைஞர். இவர் மட்டுமல்ல, பசுபதி, விமல், சண்முகராஜன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்கள். இன்னும் பல கலைஞர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
வயது முதிர்வு மற்றும் உடலக்குறைவு காரணமாக முத்துசாமி இன்று(அக்., 24) காலமானார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது மற்றும் சங்கீத அகாடமி விருது பெற்றுள்ளார்.