ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பின்னணி பாடகி, சின்மயி, மீ டூ ஹேஷ்டேக்கில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். தொடர்ந்து அவர் மீது ஏராளமான பெண்கள் புகார் கூறி வருகின்றனர். ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், சுசி கணேசன், அர்ஜூன், தியாகராஜன் போன்ற திரைப்பிரபலங்களும் இந்த விவகாரத்தில் சிக்கினர்.
இதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து வருவதோடு, சுசி கணேசன், அர்ஜூன், தியாகராஜன் ஆகியோர் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீ டூ பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சகோதரி ரைஹானாவிடம் விசாரித்ததாக ரைஹானாவே பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ரஹ்மான். அவர் தனது டுவிட்டரில், மீ டூ இயக்கத்தை கவனித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை தந்தது. நமது திரையுலகம் சுத்தமானதாகவும், பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய இடமாகவும் பார்க்க விரும்புகிறேன்.
நானும், எனது குழுவும் எங்களுடன் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வேலை பார்க்கும் சூழலை ஏற்படுத்தி தந்துள்ளோம். சமூகவலைதளம் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கான சுதந்திரத்தை பெற்று தந்துள்ளது. அதேசமயம் இதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க, இணையதள நீதி அமைப்பு ஒன்றை அமைப்பது நல்லது.
இவ்வாறு ரஹ்மான் கூறியுள்ளார்.