ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ரஜினிகாந்த பல ஆண்டுகளாகவே தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ந் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று பொது மேடையில் வெளிப்படையாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். மாநில, மாவட்ட, கிளை மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். ரஜினி, மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்துப் பேசினார். இதற்கு இடையில் 2 படங்களிலும் நடித்து முடித்து விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் பேட்டி அளித்த ரஜினி, "கட்சி தொடங்க 90 சதவிகித பணிகள் முடிந்து விட்டது" என்றார். வருகிற டிசம்பர் 31ந் தேதிக்கு ரஜினி அறிவித்து ஒரு ஆண்டு நிறைவடையும். அதற்கு மேலும் தாமதித்தால் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்று கருதிய ரஜினி, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக கட்சி பெயர், கொடியை அறிவித்து விடுவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினி அதற்கான பணியில் இறங்கி உள்ளார்.
வழக்கமாக வெளியூரில் நீண்ட நாட்கள் படப்பிடிப்புக்கு சென்று விட்டு திரும்பினால் தனது படப்பை பண்ணை வீட்டில் அவர் ஓய்வெடுப்பது வழக்கும். ஆனால் இந்த முறை அப்படிச் செல்லாமல் ராகவேந்திரா கல்யாண மண்படத்திற்கு தினமும் வந்து கட்சி தொடங்குவதற்கான பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். நேற்று மன்றத்தின் மாநில மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், தனது நெருக்கமான நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்றைய தினம் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.