'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் சுசீந்திரனை போல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மாறிவிட்டார் என்றே தெரிகிறது.. ஆம்.. சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் என மூன்று படங்களை அடுத்தடுத்து விரைவாக இயக்கி முடித்துவிட்டார்.
இதே பாணியில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிந்தியில் இம்ரான் ஹாஸ்மி, வேதிகாவை வைத்து தான் இயக்கிவந்த 'பாடி' என்கிற படத்தை 39 நாட்களில் முடித்தார். அந்தப்படம் முடித்த கையோடு மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்தார்.
கடந்த செப்-1௦ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெறும் 42 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வரும் ஜீத்து ஜோசப், நடிகர் கார்த்தியை தனது அடுத்த படத்தில் இயக்கவுள்ளார்.