ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அர்ஜுன் மீது தொடர்ந்து பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அதனை அர்ஜுன் கடுமையாக மறுத்திருப்பதுடன் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பாலியல் புகார்களுக்கு அர்ஜுன் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
அர்ஜுன், தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகர், அனுபவம் வாய்ந்த நடிகர் அதை நாம் மறந்து விடக்கூடாது. அதே நேரத்தில் பாலியல் புகார் கூறியுள்ளவர்களின் மனநிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இத்தனை நாள் தங்களுக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொண்டு அந்த வலியுடனேயே வாழ்ந்திருக்கிறார்கள்.
தன் மீதான பாலியல் புகாரை அர்ஜுன் மறுத்தாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அது அவரது பெருந்தன்மையை காட்டும். பெண்களால் முன்னெடுக்கப்படும் மீ டூ இயக்கம் வருங்காலத்தில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.