இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். 4 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் அவர் பேரன்களுடன் பொழுதை கழித்து வருகிறார். நேற்று தனது பேரன் வேத் கிருஷ்ணாவுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வேத் கிருஷ்ணா தாத்தாவிடம் ஆட்டோவில் போக வேண்டும் என்கிற தன் ஆசையை கூறியிருக்கிறான்.
உடனே ரஜினி தன் கார் டிரைவர் மூலம் ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் அவரும், பேரனும், மகள் சவுந்தர்யாவும் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஆழ்வார் பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றனர். பேரன் வேத் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவதை ரசித்தபடி ரஜினி சென்றுள்ளார். அவர்களின் பாதுகாப்பிற்காக காரில் பாதுகாவலர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஆட்டோவில் ரஜினி குடும்பத்துடன் பயணிப்பதை பொது மக்கள் சிலர் கண்டுபிடித்து அவரை பார்த்து கை அசைத்தனர். ரஜினியும் பதிலுக்கு கை அசைத்தார்.