ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன் என, ஆசை காட்டினார் என, நடிகரும், இயக்குனருமான, தியாகராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில், மீ டூ விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துமீறல் கவிஞர் வைரமுத்து, நடிகர் அர்ஜுனை தொடர்ந்து, நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தியாக ராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் கூறிஉள்ளார்.தியாகராஜனின் மகனும், நடிகருமான பிரசாந்த் நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் குறித்து, சமூக வலைதளத்தில், அவர் பதிவிட்டுள்ள கருத்து:பிரசாந்த், கதாநாயகனாக நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், நான் புகைப்பட கலைஞராக பணிஆற்றினேன். அப்படத்தின் இயக்குனரான தியாகராஜன், தாய்லாந்து நாட்டு பெண்கள், எனக்கு மசாஜ் செய்தனர்; அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன் எனக்கூறி, சில புகைப்படங்களை, என்னிடம் காட்டினார்.இதை தொடர்ந்து, நள்ளிரவில் நான் தங்கி இருந்த, அறை கதவை தட்டி பயமுறுத்தினார். இரவு முழுவதும் துாங்காமல், பயத்துடன் இருந்தேன்.
மருந்து: ஷூட்டிங்கின் போது, ஆபாசமாக பேசுவார். என்னை, அடுத்த ஐஸ்வர்யா ராயாக மாற்றுகிறேன் என்றார்; நான் மறுத்து விட்டேன். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, என் அறைக்கு வா; மருந்து தருகிறேன் என்றார்.இவ்வாறு, பிரித்திகா மேனன் பதிவிட்டுள்ளார்.
கலைஞர்கள் பாதுகாப்பு குழுநடிகர் சங்கம் அறிவிப்புசினிமா மற்றும் நாடகத்தில் பணியாற்றுவோருக்காக, கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என, தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கை:சினிமா மற்றும் நாடகங்கள் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில், பாலின வேறுபாடு கூடாது. மன அழுத்தம், அச்சுறுத்தல் இன்றி, கலைஞர்கள், சுதந்திரமாக, சுயமரியாதையோடு, தங்கள் கலையை செயல்படுத்தும் சூழல் வேண்டும்.இந்த சூழலை தக்கவைப்பதுடன், பாதுகாக்கவும், தென்னிந்திய நடிகர் சங்கம், தீவிர கவனம் செலுத்தும். இதற்காக, கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.