தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், 850 விவசாயிகளின் வங்கி கடன்களை திருப்பி செலுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் 76, கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் 350 விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை திருப்பி் செலுத்தினார். இந்நிலையில் நிலையில், இந்த ஆண்டு உபி. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 850 விவசாயிகளின் வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார்.
இது குறித்து அமிதாப் பச்சன் முகநூலில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு 350 விவசாயிகள் வங்கி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தார்கள். அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தி தற்கொலை செய்யும் முடிவிலிருந்து தடுத்தேன். இந்த ஆண்டு உ.பி. மாநிலத்தில் 850 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களின் ரூ.5.5 கோடி விவசாயக் கடனை வங்கியில் செலுத்தி இருக்கிறேன் விவசாயிகளுக்காக நாம் ஏதாவது செய்துவருவது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
அமிதாப்பின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.