டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காலாவை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்ற நிலையில் நேற்றோடு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. இதை ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். படப்பிடிப்பை முடித்து விமானம் மூலம் சென்னை திரும்பிய ரஜினி, செய்தியாளர்களிடம் பேசியதாவது :
கட்சி அமைப்பதற்கான 90 சதவிகித வேலைகள் தயாராக உள்ளது. விரைவில் கட்சியை அறிவிப்பேன். ஆனால் டிசம்பர் 12 கட்சி அறிவிப்பு இல்லை. பெண்கள் அனைவருக்கு சம உரிமை உள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை. சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க வேண்டும், அதேசமயம் ஐதீகத்தில் யாரும் தலையிடக்கூடாது.
Metoo விவகாரம் பெண்களுக்கு சாதகமான ஒன்று, அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. வைரமுத்து மேல் கொடுக்கப்பட்ட புகாரை அவர் நிராகரித்துள்ளார், அதற்குரிய ஆதாரம் இல்லை என தெரிவித்திருக்கிறார். இறுதியாக பேட்ட படம் பராக் என்று கூறி விடைபெற்றார்.