டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்குத் திரையுலகத்தின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா, சர்ச்சைக்குரிய பல தெலுங்கு, ஹிந்திப் படங்களை இயக்கியிருக்கிறார். இவர் அடுத்து இயக்க உள்ள படம் 'லட்சுமியின் என்டிஆர்'.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய வாழ்க்கையில் லட்சுமி பார்வதி நுழைந்த பிறகு உள்ளதை படமாகக் கொடுக்க உள்ளார். இந்தப்படத்தில் எந்த அரசியல் பின்னணியும் இருக்காது என ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
நாத்திகவாதியான ராம்கோபால் வர்மா இந்தப் படத்திற்காக இன்று முதல் முறையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து வணங்கி படத்தை ஆரம்பித்துள்ளார். அவருடன் என்டிஆரின் மனைவியான லட்சுமி பார்வதியும் வந்திருந்தார்.
இந்தப்படம் பற்றி லட்சுமி பார்வதி கூறுகையில், “இந்த பயோபிக் படம் சிறப்பாக எடுக்கப்படும் என நினைக்கிறேன். வரும் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகன் பாலகிருஷ்ணா 'என்டிஆர்' என்ற பெயரில் ஏற்கெனவே உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.