ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'வடசென்னை' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் வடசென்னை வாழ் மக்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள பெண் கதாபாத்திரங்கள் கூட படத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.
குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் ஒரு கெட்ட வார்த்தை இதுவரை எந்த ஒரு சினிமாவிலும் இடம் பெறாத ஒரு அசிங்கமான கெட்ட வார்த்தை. அந்த வார்த்தையை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள் என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் கூட அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.
'வடசென்னை' என்றாலே இப்படிப்பட்ட மக்கள்தான் இருப்பார்கள் என்ற மோசமான முன்னுதாரணத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது என வடசென்னை வாழ் மக்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 'வடசென்னை' படத்தின் அடுத்த இரண்டு பாகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அவற்றில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் இருக்கக் கூடாது என்று பலரும் இப்போதே கோரிக்கை வைத்துள்ளார்கள்.