தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல குணசித்ர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். இவர் சென்னை அய்யப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டி வருகிறார்.
இது தொடர்பாக அவர் சங்க கூட்டத்திலும் பேசியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனக்கு டெலிபோனில் மிரட்டலும், ஆபாச பேச்சு தொல்லையும் வருவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் போலீஸ் இணை கமிஷனரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் 2013-ம் ஆண்டு துவக்கப்பபட்டுள்ளது. ஆனால் அந்த குடியிருப்பு வளாகம் 2015ம் ஆண்டு தான் திறக்கப்பட்டது. சட்டவிரோதமாக அமைந்த இந்த சங்கத்தில் பல முறைகேடுகள் நடந்து வருகிறது. அதற்கு எதிராக நான் குரல் கொடுத்து வருகிறேன். அதனால் எனக்கு கடந்த 6 மாதமாக தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் வருகிறது. நான் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து ஆபாசமாக பேசுகிறார்கள். அதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன். என்றார்.