இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்குப்பின் அவரது மகள் ஸ்ரீமயிக்கு, அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் ஆதரவாக இருந்து வருகிறார்கள்..
இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார். அதன்பின் ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் மேற்கொண்டு அந்தப்படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்தநிலையில் கல்பனாவின் மகள் ஸ்ரீமயி, தான் 'மோலிக்குட்டியின் சுயம்வரம்' என்கிற புதிய படம் ஒன்றில் அறிமுகமாகி நடித்து வருவதாகவும், அந்தப்படத்தை பஷிலி கபீர் என்பவர் இயக்குவதாகவும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் தனது தாய்க்கு தந்த ஆதரவை தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீமயி.