டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
விரும்மாண்டி, எம் மகன், சண்டக்கோழி, சிவப்பதிகாரம், பைரவா, மாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் நடிகர் சண்முகராஜன். தற்போது முன்னணி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நந்தினி என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது இதே சீரியலில் நடிக்கும் நடிகை ராணி, சென்னை, செங்குன்றம் போலீசில் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணி, சண்முகராஜன், தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார். என் உடலில் அங்கும், இங்கும் தொடுகிறார். தனியாக அவரது ரூமிற்கு வரும்படி கூறுகிறார். இதற்கு நான் மறுக்கவே, என்னை தாக்கினார். இதை என் கணவர் தட்டி கேட்டபோது அவரையும் அடிக்க பாய்ந்தார் என்றார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்து வரும் வேளையில், நடிகர் சண்முகராஜன், செங்குன்றம் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் சண்முகராஜன், ராணியிடம் மன்னிப்பு கேட்டார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் ராணி, புகாரை வாபஸ் பெற்றார்.