ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விரும்மாண்டி, எம் மகன், சண்டக்கோழி, சிவப்பதிகாரம், பைரவா, மாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் நடிகர் சண்முகராஜன். தற்போது முன்னணி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நந்தினி என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது இதே சீரியலில் நடிக்கும் நடிகை ராணி, சென்னை, செங்குன்றம் போலீசில் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணி, சண்முகராஜன், தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார். என் உடலில் அங்கும், இங்கும் தொடுகிறார். தனியாக அவரது ரூமிற்கு வரும்படி கூறுகிறார். இதற்கு நான் மறுக்கவே, என்னை தாக்கினார். இதை என் கணவர் தட்டி கேட்டபோது அவரையும் அடிக்க பாய்ந்தார் என்றார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்து வரும் வேளையில், நடிகர் சண்முகராஜன், செங்குன்றம் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் சண்முகராஜன், ராணியிடம் மன்னிப்பு கேட்டார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் ராணி, புகாரை வாபஸ் பெற்றார்.