வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்' படத்தில் நடிகராக அறிமுகமானவர் தமன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2008ல் வெளிவந்த 'சிந்தனை செய்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தொடர்ந்து 'ஈரம், காஞ்சனா, ஒஸ்தி, மௌன குரு, காதலில் சொதப்புவது எப்படி, தடையறத் தாக்க, சேட்டை, வாலு, மீகாமன், காஞ்சனா 2, இவன் தந்திரன், ஸ்கெட்ச்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அவரால் இடம் பிடிக்க முடியவில்லை.
இருப்பினும் தெலுங்குத் திரையுலகத்தில் பல முன்னணி ஹீரோக்களின், பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து அங்கு முக்கிய இடத்தில் உள்ளார். அவர் இசையமைப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'அரவிந்த சமேதா' படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது சிலர் அவருடைய 'காப்பி' இசையைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதைக் கேட்டதும் கோபத்தில் அவர் அளித்த பதில்...
“என்னுடைய இசையைப் பற்றி குற்றம் சாட்டுபவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது கீரவாணி ஆகியோரிடம் இது பற்றி கேள்வி கேட்க முடியுமா?. என்னை மட்டுமே வேண்டுமென்று 'டார்கெட்' செய்கிறார்கள். நான் காப்பி அடிக்கிறேன் என்றால் ஏன் இயக்குனர்களும், நடிகர்களும் எனக்கு வாய்ப்புத் தருகிறார்கள்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவருடைய காப்பியைப் பற்றிக் கேட்டால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது தேவையில்லாமல் பாய்கிறாரே என கேள்வி கேட்ட நிருபர்கள் நொந்து போயிருக்கிறார்கள். ஹிந்தி, ஆங்கிலப் பாடல்களை மட்டுமல்லாது தன் முந்தைய பாடல்களையே காப்பியடிப்பவர் தமன் என தெலுங்கு ரசிகர்கள் அவரை விமர்சிக்கிறார்கள்.