‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மறைந்த பிரபல மலையாள நடிகர் திலகன், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடும் குணமுள்ளவர். மலையாளத்தில் சீனியர் நடிகையான கே.பி.ஏ.சி லலிதாவும் திலகனும் சுமார் இருபது வருடங்களுக்குமுன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.
லலிதாவின் கணவர் இயக்குனர் பரதன் (தேவர்மகன் படத்தை இயக்கியவர்) தனது படங்களில் ஜாதியை தூக்கிப்பிடிகிறார் என அடிக்கடி லலிதாவிடம் கோபமாக வாதம் செய்வாராம் திலகன். இதனால் எரிச்சலான லலிதா இனி உங்களுடன் பேசமாட்டேன் என சொல்ல, திலகனும் பதிலுக்கு ஒரு தீக்குச்சியை இரண்டாக முறித்து நானும் உன்னுடன் பேசப்போவதில்லை என கூறிவிட்டாராம்.
இப்படி பேசிக்கொள்ளாமல் இருந்த காலகட்டத்தில் தான், இருவரும் ஸ்படிகம் படத்தில் மோகன்லாலின் பெற்றோராக கணவன் மனைவியாகவும் நடித்தனராம். அதன்பின் காதலுக்கு மரியாதையின் மலையாள ஒரிஜினலான 'அனியத்தி பிறா' படத்தில் இவர்கள் நடித்தபோது, உடன் நடித்த ஸ்ரீவித்யா, இவர்களின் சண்டையை அறிந்து, இருவருக்குள்ளும் சமரசம் செய்து வைத்து, மீண்டும் இருவரையும் பேசவைத்தாராம்.