டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி மற்றும் பலர் நடிக்கம் படம் 'சர்க்கார்'. ஒரு அரசியல் படமாக உருவாகி வரும் இந்தப் படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இப்படத்தின் வினியோக உரிமையை 'மெர்சல்' படத்தைத் தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள் ஏரியாவாரியாக படத்தைப் பிரித்து விற்று வருகிறார்கள். 'மெர்சல்' படத்தின் வியாபாரம் என்ன, வசூல் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் படத்தை அவர்களிடம் கொடுத்துள்ளது படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ்.
எதிர்பார்த்தது போலவே, 'மெர்சல்' படம் விற்கப்பட்ட விலைக்கும் அதிகமாக 'சர்க்கார்' படத்தின் வியாபாரம் நடைபெற்று வருகிறதாம். மிகப் பெரும் கூட்டணி என்பதால் படத்தின் வியாபாரம் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. 'மெர்சல்' படத்தில் ஓரிரு அரசியல் வசனங்கள் இருந்ததற்கே சர்ச்சை எழுந்தது. 'சர்கார்' படமே அரசியல் படம் என்பதால் வெளியீட்டு சமயத்தில் ஏதாவது நடக்குமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.