ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்திலும், ஆந்திர அரசியலிலும் தனிப் பெருமையுடன் விளங்கியவர் என்டிஆர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை 'என்டிஆர்' என்ற பெயரில் அவருடைய மகன் பாலகிருஷ்ணா தயாரித்து, 'என்டிஆர்' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.
அந்தப் படத்திற்குப் போட்டியாக 'லட்சுமியின் என்டிஆர்' என்ற படத்தை இயக்கப் போவதாக ராம்கோபால் வர்மா ஏற்கெனவே அறிவித்து முதல் பார்வையையும் வெளியிட்டிருந்தார். ஆனால், ஒரு வருட காலமாக அந்தப் படத்தை அவர் ஆரம்பிக்கவில்லை. அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதி திருப்பதியில் இப்படத்தின் துவக்கவிழாவை வர்மா நடத்த உள்ளார்.
“லட்சுமியின் என்டிஆர் படத்தை ஆரம்பிக்கப் போவது சிலிர்ப்பாக உள்ளது. படம் ஜனவரி கடைசியில் வெளியாகும். 'என்டிஆர்' படம் லட்சுமி பார்வதி அவருடைய வாழ்க்கையில் நுழைந்ததும் முடிந்துவிடும். ஆனால், என்னுடைய 'லட்சுமியின் என்டிஆர்' லட்சுமி பார்வதி நுழைந்த பின் ஆரம்பமாகும். திருப்பதியில் நடைபெற உள்ள துவக்கவிழாவில் ஆச்சரியமான விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். 'லட்சுமியின் என்டிஆர்' படத்திற்குத்தான் என்னுடைய வாழ்க்கையில் நான் முதல் முறையாக துவக்க விழா நடத்துகிறேன். என்டிஆர் மீது நான் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக திருப்பதி பாலாஜி காலடியில் இந்தப் படத்தை ஆரம்பிக்கிறேன்,” என ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.