டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக என்னை அணுகினார், மிரட்டினார் என பாடகி சின்மயி கூறிய சம்பவம் திரையுலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதோடு காலையில் இதுதொடர்பாக நீண்டதொரு விளக்கத்தையும் பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி கூறியதாவது : பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த சம்பவம் நடந்தது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரத்திற்கு இப்போது ஆதாரம் கேட்பது முறையற்றது. அதற்கான ஆதாரங்கள் இல்லை.