ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா பிரபலங்களின் பெயர்களில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் ஏராளமான கணக்குகள் உள்ளன. ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
போலி பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான தகவல்களை வெளியிட்டு அதனால் சிக்கல் வரும்போது, அய்யோ அது நான் அல்ல, என் பெயரில் யாரோ செய்த வேலை என்று கூக்குரலிடுவார்கள். போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுப்பார்கள்.
சினிமா நட்சத்திரங்கள் பெயர்களில் போலி கணக்குகளை ஆரம்பித்து மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது அடுத்தக்கட்டத்துக்கும் சென்றுவிட்டனர். அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிய வந்ததும் விஜய் தரப்பிலிருந்து எச்சரிகை அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
“சமீப காலத்தில் விஜய்யின் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும், அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர். மேலும் அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.
விஜயின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை. தயவு செய்து, யாரும் இந்த போலி கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.