தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2004-ல் மலையாள திரையுலகில் தனது நடிப்பு பயணத்தை துவங்கிய பூர்ணா, 2008ல் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் அறிமுகமானார். இப்போதுவரை கதையின் நாயகியாக அல்லது வில்லியாக என முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இவருக்குப்பின் சினிமாவுக்குள் வந்த பல நடிகைகள் திருமணம் குடும்ப வாழ்க்கை என செட்டிலாகிவிட்டனர். ஆனால் பூர்ணா தனது திருமண விஷயம் குறித்து இதுவரை பேசியதில்லை. சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றில், தனது திருமணம் தாமதமாக தடையாக இருப்பது எது என்கிற விபரம் குறித்து கூறியுள்ளார் பூர்ணா.
“என் அம்மா எனது திருமண பேச்சை எடுக்காத நாளில்லை. ஆனால் திருமணத்திற்கு எனது ஜாதி மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதையும் மீறி சம்பந்தம் பேச வருபவர்களும், திருமணத்திற்குப்பின் நான் நடிப்பு, நடனம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும் என்கின்றனர். காதல் திருமணம் என்றால் கூட அங்கேயும் இதுபோல எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். இதனாலேயே எனது திருமணம் தள்ளிபோகிறது” என்றார்.
அதேசமயம் ஜாதியை பெரிதாக நினைக்காமல் நிபந்தனை இல்லாமல் வரும் வரனை திருமணம் செய்துகொள்வதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார் பூர்ணா. இவரது நிஜப்பெயர் ஷாம்னா காசிம் என்பதும் இவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.