இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பெண்கள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதை வெளிக்கொண்டு வரும் விதமாக உலகம் முழுக்க #MeeToo என்ற ஹேஷ்டேக் பிரபலமாது. இந்தியாவிலும் இது பிரபலமாக பாலிவுட், கோலிவுட், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் சிக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில், கவிஞர் வைரமுத்து, தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என பாடகி சின்மயி சமூகவலைதளத்தில் பதிவிட, இந்த பிரச்னை விவகாரமானது. மேலும், நடிகர்கள் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண் உள்ளிட்ட பலரது பெயர்களும் இந்த விவகாரத்தில் சிக்கினர்.
வைரமுத்துவோ, தன் மீது அவதூறு பரப்புகின்றனர். தொடர்ச்சியாக நான் அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். உண்மைக்கு புறம்பான எதையும் பொருட்படுத்துவது கிடையாது. உண்மையை காலம் சொல்லும் என டுவிட்டரில் விளக்கம் அளித்தார்.
வைரமுத்துவின் இந்த பதிவை குறிப்பிட்ட சின்மயி, அவர் ஒரு பொய்யர் என கூறினார். மேலும் தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்துவால் பாலியல் ரீதியாக பிரச்னைக்கு உள்ளானதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் சின்மயி, நேரலையில் பேசினார். அதில், வைரமுத்து தொடர்பாக நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. இது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைவருக்குமே தெரியும். இருந்தும் ஏன் மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களிடம் கேட்டால் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்னைகளை கூறுவார்கள்.
என் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தோம். எல்லோரையும் அழைத்து அவரை மட்டும் அழைக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை சொல்ல நேரிடும். MeeToo விவகாரத்தில் ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து பேச தொடங்கி உள்ளனர்.
இப்போது தான் பாலியல் தொல்லைகள் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறோம். நிலைமை மாறிக்கொண்டே வருவதால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் அரசியல் கட்சி சார்பற்றவள்.
வைரமுத்துவால் இன்னும் சில பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அதை சொல்ல தயங்குகிறார்கள். என் நடத்தை பற்றி பேசுகிறார்கள், நான் ஒழுக்கமானவள். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியும்.
வைரமுத்து மீதான குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் தான் வெட்கப்பட வேண்டும்; நான் வெட்கப்பட மாட்டேன். MeeToo மூலம் ஏராளமான குற்றச்சாட்டுகள் வெளி வருகின்றன.
இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.
சின்மயி பேஸ்புக்கில் நேரலையில் பேசிய வீடியோ லிங்க் இதோ : https://www.facebook.com/ChinmayiSripada/videos/162673284674625/